Thursday, April 12, 2012

Jus like that

ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
பத்து பதினொன்னு பன்னெண்டு பதிமூணு
எழுதிட்டேன் பாரு நானும் புதுகவிதை !


நாலு நாலு வார்த்தை சேத்துபோட்டேன்
வைரமுத்து வரியை ஆட்டைய போட்டேன்
அடுத்தவன் ப்ளொக்லே கமெண்டை போட்டேன்
கவிதேன்னா இது தான்னு சொல்லிபோட்டேன் !


காதல்லே தான் ஆரம்பிச்சேன்.
காதலேயே நின்னுகிட்டேன் !
உருகி உருகி எழுதிடுவேன் ,
காதலை விட்டு வேற கேட்டா…
தத்து பித்துன்னு உளறிடுவேன் !
கேட்டா “கவிஞன்”னு சொல்லிடுவேன் !


சின்னவயசு பள்ளிகூட கட்டுரை,
வாரம் ஒன்னு எழுதிடுவேன் .
நெட்டுலே “கவிஞன்”னு சொல்லனும்னு ,
நாலு நாலு வார்த்தையா பிரிச்சி போட்டுடுவேன்

No comments:

Post a Comment