Thursday, April 12, 2012

காதல்


எதிர்பார்க்கும் விடை தராமல்
எதிர்பார்த்த‌ வினா வைப்பதேனோ?

***************************

மலரினும் மிருதுவான கன்னத்தில்,
அழகு சேர்க்க விழுந்ததேனோ ஒரு குழி,
புதிய பூவென பட்டாம்பூச்சி அமர்ந்ததாலா?
என் முத்தம் வந்து நிரப்பத்தானா?

***************************

பூமிக்கு இரண்டு காதலிகள்
இருட்டிலே பழக ஒரு நிலா
பகலிலே ரசிக்க நீ !

******************************

Please post your comments on how you liked this posting.

No comments:

Post a Comment