Thursday, April 12, 2012

துணை

ஒரு கூட்டத்திலும் உன்னை அறிந்திடுவேன்
உன் ஆசைக்கு தான் என்றும் பணிந்திடுவேன் !

உன் ஒரு விரல் தீண்டலில் சிலிர்த்தேழுவேன்
மடி கொடுத்தால் தினம் தவழ்ந்திடுவேன் !

உன் மர்மங்களை அறிந்திடுவேன்
அச்சம் வேண்டாம்… என்னில் புதைத்திடுவேன் !

உன் சின்ன இச்சைகள் கேட்டுவைப்பேன்
இன்பம் களிக்கும் நேரத்தை நிறுத்திவைப்பேன் !

உன் நாட்களை நான் வகுத்திடுவேன்
ஒவ்வொரு வகையிலும் துணை இருப்பேன் !

அன்பே தினமும் என்னை கவனி !
நான் குற்றேவல் புரியும் உன் கணினி !

Appada, oru vazhiya computerkum oru kavithai eluthiyaachu … Ithai padichu tension aanarvagaluku yen varuthathai therivithu kolgiren ;)

No comments:

Post a Comment