Thursday, April 12, 2012

நாணும் காதல்(லி)

கொடியிடையின் பவனியிலே பூநெஞ்சமும் சிதையுதே !
துளி சிந்திய பார்வையில் மயக்கமும் பிறக்குதே !
உன்னோடு இருக்கையிலே என் இளமை தடுமாறுதே !


கைகளால் முகத்தை மறைத்தது நாணமோ?
காதலன் தீண்ட பெண்மையும் நாணுமோ ?
தென்றல் தீண்ட மலரும் மறுக்குமோ?
அலைகள் நனைக்க கரையும் தடுக்குமோ ?

பூவுக்குள் மணம் பிறந்த அதிசயம் தான் என்ன ?
நெஞ்சுக்குள் காதல் வந்த ரகசியம் தான் என்ன ?
பக்தியின் ஒளியில் கடவுள் தென்பட்டது போல்,
உன் அன்பின் ஒளியில் காதலை உணர்ந்ததென்ன?

No comments:

Post a Comment