Thursday, April 12, 2012

(இ)3 – extended version ;)

This is the “uncensored” version which  I was apprehensive about it. But ithoda mosama ellam post podaranga nu yen nalamvirumbigal sonnathaale, ithai post panaren :)

இணையத்தில் ஆரம்பித்த பரிமாற்றம்,
என் நெஞ்சினில் உருவானது தடுமாற்றம்.
இதயங்கள் இன்று இடமாற்றம் !


தூதில் வளர்ந்தது காதல் சிந்தனை !
மின்வெட்டுகள் ஒன்றே நிந்தனை !
கலவி அறிந்து குறுநகை புரிந்தது,
தனிமையை உணர்ந்த நம் பஞ்சனை !


குழி விழும் கன்னத்திலே,
மோக அலைகள் அடிப்பதென்ன ?
காதலில் மூழ்கி தவிக்கின்றேன்;
இதய தேவதையும் சிரிப்பதென்ன ?
தேவகன்னியும் சிரிக்கும் போது
இன்ப அமிலம் தான் சுரப்பதென்ன ?


குறுந்தகவலில் அனுப்பிய முத்தங்கள்
உன் குறும்பின் முன்னுரையோ?
என் தேகத்தில் படரும் உன் விரல்கள்
காமன் கலையில் தொடர்கதையோ?


சிவந்த ரோஜா மலரோ உன் தேகம்
குளிர் தென்றலை போலே தழுவட்டுமா?
ஒரு வண்டாய் மாறி உன்னிதழ்கள்
பதுக்கும் தேனை பருகட்டுமா ?
கடவுளை நாடும் பக்தன் போலே
காதல் சிந்து நித்தம் படிக்கட்டுமா?

No comments:

Post a Comment