Sunday, August 8, 2010

Puthiya manitha - song lyrics

Lyrics: Vairamuthu
Singer; SP Balasubramaniam

Enthiran

(robo SPB)
புதிய மனிதா
பூமிக்கு வா

(robo)
எஃகை வார்த்து
சிலிகான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட் டிஸ்கினில் நினைவூட்டி
அழியாத உடலோடு
வடியாத உயிரோடு
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி

(Khatija)
மாற்றம் கொண்டுவா
மனிதனை மேன்மை செய்
உனது ஆற்றலால்
உலகை மாற்று

எல்லா உயிருக்கும்
நன்மையாய் இரு
எந்த நிலையிலும்
உண்மையாய் இரு

(SPB)
எந்திரா...எந்திரா..
என் எந்திரா!
நான் கண்டது ஆறறிவு
நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறு மொழி
நீ கற்றது நூறு மொழி
ஈரல் கலையும் துன்பமில்லை
இதயக்கோளாறு ஏதுமில்லை
தந்திர மனிதன் வாழ்வதில்லை
எந்திரம் வீழ்வதில்லை

கருவில் பிறந்த எல்லா மரிக்கும்
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை
இதோ என் எந்திரன்
இவன் அமரன்
இதோ என் எந்திரன்
இவன் அமரன்


நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே

(chorus - twice)
புதிய மனிதா
பூமிக்கு வா

(SPB)
நான் என்பது அறிவு மொழி
ஏன் என்பது எனது வழி
வான் போன்றது எனது வெளி
நான் நாளைய ஞானஒளி

நீ கொண்டது உடல் வடிவம்
நான் கொண்டது பொருள் வடிவம்
நீ கண்டது ஒரு பிறவி
நான் காண்பது பல பிறவி

ரோபோ ரோபோ
பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ் அல்லவா !
ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை அல்லவா !

(robo SPB)
புதிய மனிதா
பூமிக்கு வா

No comments:

Post a Comment