Saturday, March 5, 2011

மன்னிபேனா?

கட்டுக்கடங்காமல் உன்மேல் பாயும்
கண்களின் குறும்புகளை மன்னித்தேன்;
நா சொல்ல முயன்று தோற்பதை
உன்னிடமே எளிதில் சொல்வதனால் !

என் பேச்சுக்கு பணியாத என்
இதயத்தின் திமிரினை மன்னித்தேன் ;
நொடிப்பொழுதில் பல கனவுகள்
உன்னோடு இது புனைவதனால் !

என்னை தவிர்த்து மண்ணைப் பார்க்கும்
உன் விழிகளின் நாணத்தை மன்னிபேன் ;
நேர் பார்வையிலே சொல்ல தவறியதை
ஓரவிழி பார்வையிலே சொல்லுமானால் !

1 comment: