Tuesday, February 15, 2011

Kaadhal Vaadham

சேலை கட்டிய மஞ்சள் நிலவே
கொஞ்சம் மெதுவாய் தான் என்னை கடந்து செல்லடி !
பேரழகி உன்போல் இவ்வூரில் யாரடி ?
ஆனாலும் பெண்களில் கொடியவள் நீ ஒருத்திதானடி !

உன்னை திட்ட பேனா எடுத்தேன்,
அழகிய கவிதையொன்று எழுதி முடித்தேன்!


சிற்பமும் தோற்கும் உன்கொடியிடை நளினம் ,
மூழ்கடித்து கொல்லுதடி  நீ ஏற்றிவிட்ட சலனம் !
என் மனம் என்னை விட்டு பிரிந்துபோக ,
நித்தமும் செய்கிறாய் ஒரு தீவிரவாதம் !
என் வாழ்வையே பொம்மலாட்டமாய் விளையாடி பார்க்குதடி,
உன் கண்கள் செய்யும் காதல்வாதம் !

No comments:

Post a Comment