Saturday, August 13, 2011

ஏமாற்றம்

காதல் என்னும் போதை தான்
தெளிந்துவிட்டால் வெறுமை தான் !
கண்பட்ட அழகும் என் ரசனை தான் !!!
பின் சுக்குநூறாய் உடைத்தெறிந்தாய் ...
மனதில் மிஞ்சியது வேதனை தான் !!!

விரல் பற்றி நடக்கும் பிள்ளை போல ,
உன்விழி பற்றியே நடந்தேனே !
மரம் பற்றிய கொடிபோல ,
உன் அன்பைபற்றியே படர்ந்தேனே !
இன்று இருள்காட்டிலே தொலைந்தேனே !!!

கவிதைகள் உண்டு பல்லாயிரம் ,
இன்னும் கற்பனை வளர்ப்பார் ஆயிரம் !
மண்ணில் மற்றவர் இனிதே வாழ்ந்திருக்க ,
நான் மட்டும் தனிமையில் தவிப்பதேனோ ???

மதியிழந்திருந்தேனோ
அந்த மயக்கும் பொழுதுகளில் ???
உன் நினைவிழந்திருப்பேனோ ....
இனி வரும் மாலைகளில் ???
நாவினால் சுட்ட வடுவும்
ஆறிவிடும் என்கண்ணே ,
உன் காதலினால் சுட்ட வடு ஆறாதே !!

No comments:

Post a Comment