Showing posts with label tamil poem about computer. Show all posts
Showing posts with label tamil poem about computer. Show all posts

Thursday, April 12, 2012

துணை

ஒரு கூட்டத்திலும் உன்னை அறிந்திடுவேன்
உன் ஆசைக்கு தான் என்றும் பணிந்திடுவேன் !

உன் ஒரு விரல் தீண்டலில் சிலிர்த்தேழுவேன்
மடி கொடுத்தால் தினம் தவழ்ந்திடுவேன் !

உன் மர்மங்களை அறிந்திடுவேன்
அச்சம் வேண்டாம்… என்னில் புதைத்திடுவேன் !

உன் சின்ன இச்சைகள் கேட்டுவைப்பேன்
இன்பம் களிக்கும் நேரத்தை நிறுத்திவைப்பேன் !

உன் நாட்களை நான் வகுத்திடுவேன்
ஒவ்வொரு வகையிலும் துணை இருப்பேன் !

அன்பே தினமும் என்னை கவனி !
நான் குற்றேவல் புரியும் உன் கணினி !

Appada, oru vazhiya computerkum oru kavithai eluthiyaachu … Ithai padichu tension aanarvagaluku yen varuthathai therivithu kolgiren ;)